follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉள்நாடுஉயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் வெளியிடப்படும்

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 3 மாதங்களுக்குள் வெளியிடப்படும்

Published on

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்தார்.

மேலும் உயர்தர பரீட்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் விடைத்தாள்களை கொண்டு செல்லும்போது எரிபொருள் இன்மையால் சில நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிட்டதாக கூறினார்.

இருப்பினும் பொலிஸாரின் உதவியுடன் அதனை முகாமைத்துவம் செய்ய முடிந்தது என பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டீ.தர்மசேன தெரிவித்தார்.

இதேவேளை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக எதிர்வரும் 12 ஆம் திகதி வரை 7 பாடசாலைகள் (கொழும்பு ரோயல், கேகாலை வித்தியாலயம், கண்டி – கிங்ஸ்வூட், கண்டி – சீதாதேவி, காலி – வித்தியாலோக, பதுளை ஊவா மகா வித்தியாலயம், இரத்தினபுரி பெண்கள் கல்லூரி) மாத்திரம் மூடப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...