அமைச்சரவையில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
புதிய அமைச்சரவை இன்னும் சில நிமிடங்களில் அறிவிக்கப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையில் எஸ்.பி.திசாநாயக்க புதிய அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பவித்ரா வன்னியாராச்சி, தினேஷ் குணவர்தன மற்றும் காமினி லொக்குகே ஆகியோருக்கு புதிய அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.