follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகச்சா எண்ணெயின் விலை உயர்வு!

கச்சா எண்ணெயின் விலை உயர்வு!

Published on

2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் பெரல் ஒன்றின் விலை 118 அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

உலகில் அதிகளவு கச்சா எண்ணெயை விநியோகிக்கும் நாடான ரஷ்யாவின்  கச்சா எண்ணெயை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் மறுத்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

உலக சந்தையில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IAEA) கூட்டத்தை தொடர்ந்து அமெரிக்கா தனது  கையிருப்பில் உள்ள 30 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய்களை உலக சந்தைக்கு வெளியிட முடிவு செய்துள்ளது.

இருப்பினும் ,இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.44 மணியளவில் பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 117 அமெரிக்க டொலர்களாகவும், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 114 அமெரிக்க டொலர்களாகவும் காணப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...