follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடு600 பொருட்களுக்கு இறக்குமதிகள் இடைநிறுத்தம் - இன்றிரவு வர்த்தமானி வௌியீடு

600 பொருட்களுக்கு இறக்குமதிகள் இடைநிறுத்தம் – இன்றிரவு வர்த்தமானி வௌியீடு

Published on

600 அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை இடைநிறுத்துவதற்கான வர்த்தமானியை இன்றிரவு அரசாங்கம் வெளியிடவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை திறைசேரியின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

நாட்டிற்கு அவசியமான விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட வேண்டும் எனவும், அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியால் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அந்நியச்செலாவணி குறைவடையுமாயின், தற்போது கையிருப்பிலுள்ளதை ஔடத இறக்குமதிக்கு ஒதுக்கிட முன்னுரிமை வழங்க வேண்டும் என எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

எரிபொருள் மற்றும் கைதொழிலுக்கான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்கும் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

 

 

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...