follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுபல்கலைக்கழகங்களை முழுமையாக ஆரம்பிக்க முடியாது

பல்கலைக்கழகங்களை முழுமையாக ஆரம்பிக்க முடியாது

Published on

பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிகளில் தங்கி கற்றல் நடவடிக்கையினை முன்னெடுத்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் அனைத்து பல்கலைக்கழக நடவடிக்கைகளையும் முழுமையாக ஆரம்பிப்பதற்கான திகதியினை உறுதியாக அறிவிக்க முடியாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், பல்கலைக்கழக செயற்பாடுகள் தற்போது 50 வீதம் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்டபேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஶ்ரீ ஜயவர்தனபுரபல்கலைக்கழகத்தில் மாத்திரம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந் நிலையில், அனைத்து பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளையும் உடனடியாக முழுமையாக ஆரம்பிப்பது நடைமுறை சாத்தியமற்றது எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...