follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுபெப்ரவரியில் அதிகளவில் வருகை தந்துள்ள சுற்றுலாப்பயணிகள்

பெப்ரவரியில் அதிகளவில் வருகை தந்துள்ள சுற்றுலாப்பயணிகள்

Published on

இரண்டு வருடங்களின் பின்னர் அதிகளவான சுற்றுலா பயணிகள் பெப்ரவரி மாதத்திலேயே இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

96,507 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளாக பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் வருகை தந்துள்ளனர்.

2020ம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் நாட்டுக்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் கடந்த பெப்ரவரி மாதத்திலேயே வருகை தந்துள்ளார்கள் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதத்தில் 82, 327 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு மொத்தமாக ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 495 பேரே வருகை தந்துள்ளனர்.

ரஷ்யாவிலிருந்தே 28,818 பேர் சுற்றுலா பயணிகளாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கடந்த வருடம் செப்டம்பர் மாதத்திலிருந்து நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கட்டம் கட்டமாக அதிகரித்துள்ளதாகவும் சுற்றுலா துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...