follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுதங்கம் கடத்த முயன்ற இந்தியர்கள் இருவர் கைது

தங்கம் கடத்த முயன்ற இந்தியர்கள் இருவர் கைது

Published on

தங்கம் கடத்த முயன்ற இந்தியர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் கழிவறைக்குள் சென்ற விமானப் பயணி ஒருவர், நீண்ட நேரமாக வௌியில் வராததையடுத்து, ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்..

இதன்போது, குறித்த பயணியிடமிருந்து 430 கிராம் நிறையுடைய 03 தங்கக்கட்டிகள் (1 கிலோ 290 கிராம்) கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

28 வயதான இந்திய பிரஜை ஒருவரே தங்கக் கட்டிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்தும் நடத்தப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபருக்கு துபாயிலிருந்து நேற்று அதிகாலை வருகைதந்த 43 வயதான மற்றுமொரு இந்திய பிரஜையால் குறித்த தங்கக்கட்டிகள் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட தங்கத்துடன் சந்தேகநபர்கள் இருவரும் சுங்கப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், பரீட்சையை...

மேல்மாகாண வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சாளரங்கள் இன்று மூடப்படும்

மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும் என மேல்மாகாண சபை தெரிவித்துள்ளது. ஏனெனில் ஜனாதிபதி...

“கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது”

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொல்ல...