follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுமரதன்கடவல பகுதியில் விபத்து - இருவர் பலி

மரதன்கடவல பகுதியில் விபத்து – இருவர் பலி

Published on

திருகோணமலை-ஹொரவபொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளார்.

இறத்மலை பகுதியிலிருந்து ஹொரவபொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற லொறியும் ஹொரவபொத்தானையிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற காரொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தில், காரின் சாரதி மற்றும் அதில் பயணித்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை ஹொரவபொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...