அனைத்து வலயங்களையும் உள்ளடக்கிய வகையில் நாளை(01) காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியில் மூன்று மணி நேர மின் வெட்டு ஏற்படலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரத் தேவை அதிகரித்தால், இரவு நேரத்தில் மேலும் 30 நிமிடம் திட்டமிடப்படாத மின்வெட்டு ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் மின்சாரத்தினை குறைந்த அளவில் பயன்படுத்துமாறும் இலங்கை மின்சார சபை நுகர்வோருக்கு அறிவுறித்தியுள்ளது.