follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுஇலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published on

பாரிஸ் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஈர்ப்பிற்கான அமைச்சர் ஃபிராங்க் ரெய்ஸ்டரை (Franck Reister ) வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், பரிஸில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் சந்தித்துள்ளார்.

இதன்போது பல்வேறு துறைகளில் இலங்கையுடனான பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான பிரான்ஸின் ஆதரவு குறித்து கலந்துரையாடினார்.

இரு அமைச்சர்களினதும் கலந்துரையாடலின் முடிவில் அவர்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு அமைச்சர் பிரான்ஸின் வர்த்தக சபையில் பல கூட்டங்களில் கலந்து கொண்டார். ஆலோசகர் பெர்னார்ட் குயின்ட் மற்றும் சர்வதேச வணிக வலையமைப்புக்களின் தலைவர் எஸ்டெல் கில்லட் ஆகியோரை அவர் வணிக சபையில் வைத்து சந்தித்தார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, பிரான்ஸ் மற்றும் இலங்கை நிறுவனங்களுக்கு இடையேயான வலையமைப்பு ஏற்பாடுகள் மற்றும் தொழில்முனைவு, வணிக முகாமைத்துவம் மற்றும் சம்பந்தப்பட்ட விடயங்களில் கல்வித் திட்டங்களுக்கான பிரான்ஸின் நிபுணத்துவம் ஆகியன தொடர்பில் குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

பிரான்ஸில் உள்ள நிறுவனங்களின் மிகப்பெரிய சங்கமான எம்.ஈ.டி.ஈ.எப். இன்டர்நெஷனலின் திரு. ஃபிராங்கோயிஸ் கார்பினுடன் பேராசிரியர் பீரிஸ் கலந்துரையாடினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...