follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுதமிழ் கைதிகள் இருவரின் உணவு தவிர்ப்பு போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது

தமிழ் கைதிகள் இருவரின் உணவு தவிர்ப்பு போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது

Published on

யாழ்ப்பாண  சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் இருவர் ஆரம்பித்த உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கடந்த 23 ஆம் திகதி புதன்கிழமை உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்த கைதிகள் 23 ஆம் திகதி முதல் உணவை புறக்கணித்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இதனிடையே, கைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர்களின் உறவினர்களால், வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...