follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுபழைய முறையில் மாகாண சபைத் தேர்தல் விரைவில் இடம்பெறும்

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல் விரைவில் இடம்பெறும்

Published on

புதிய தேர்தல் முறை உருவாக்கப்படும் வரை பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென தேர்தல் முறைகள் மற்றும் தேர்தல் சட்டங்கள் தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான விசேட பாராளுமன்ற  தெரிவுக்குழுவின் அறிக்கையில் பரிந்துரை முன்வைக்க அந்த தெரிவுக்குழு இணக்கம் தெரிவித்துள்ளதாக, அந்தக் குழுவின் தலைவரும் கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளாா்.

சகல தேர்தல் நடவடிக்கைகளின் போது தொகுதிவாரி அடிப்படையில் 60 வீதம், விகிதாசார முறையில் 40 வீதம் என்ற அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவு செய்யவும் கலப்பு தேர்தல் முறையிலான அறிக்கையொன்றை முறைப்படுத்துவதற்கு விசேட தெரிவுக்குழு இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளாா்.

அதற்கமைய, உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மை நிலைப்பாடுகளை உருவாக்குவதற்காக வெற்றிப்பெற்ற கட்சி அல்லது குழுவுக்கு மேலதிகமாக இரண்டு ஆசனங்களை பெற்றுக்கொடுக்கவும் பரிந்துரை முன்வைக்க கொள்கை அடிப்படையில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேல் வேலைவாய்ப்பு – வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, மீண்டும் பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும்...

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். வொஷிங்டனில்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை...