ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் அதன் செயலகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகள் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இவ் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
இந்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு 1978 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக 2021 ஜனவரி 28 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.