follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுபெரசிட்டமோல் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன?

பெரசிட்டமோல் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன?

Published on

நாட்டில் பெரசிட்டமோல் மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாக பல்வேறு தரப்பினரும் கூறி வந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.

அதற்கமைய, கடந்த 3 வாரங்களில் மாத்திரம் பெரசிட்டமோல் தேவைப்பாடு நூற்குக்கு 275 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ், மற்றுமொரு வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் ஆகியன பரவி வருவதன் விளைவாக, இந்த மூவகையான காய்ச்சலையும் கட்டுப்படுத்தக்கூடிய பிரதான மருந்தாக பெரசிட்டமோல் காணப்படுவதால், தற்போது அதற்கான கேள்வி அதிகரித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, உலக சந்தையில் பெரசிட்டமோலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, மருந்து இறக்குமதியாளர்கள் பெரசிட்டமோல் கொள்வனவை மேற்கொள்வதற்கு தயங்கி வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இதன் காரணமாகவே தற்போது நாட்டில் பெரசிட்டமோல் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், எவ்வாறாயினும் அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக பெரசிட்டமோல் மருந்தின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். எனவே விரைவில் பெரசிட்டமோல் மருந்துகளுக்கான தட்டுப்பாடு நீங்குமெனவும் இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசு நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவித்தது

ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து நாளை...

இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெப்ரவரி 9 ஆம் திகதி முதல்...

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பம் [நேரலை]

இன்று (05) நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் காலை 9.30 மணிக்குத் தொடங்கின.