follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகடன் வழங்க வேண்டாம் என்று உத்தரவிடவில்லை - மத்திய வங்கி ஆளுநர்

கடன் வழங்க வேண்டாம் என்று உத்தரவிடவில்லை – மத்திய வங்கி ஆளுநர்

Published on

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்குவதை நிறுத்துமாறு வங்கிகளுக்கு உத்தரவிடவில்லை. மாறாக கடன் வழங்கலின்போது பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள கடன் எல்லையை மீற வேண்டாம் என்று மாத்திரமே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்குவதை நிறுத்துமாறு மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கும் உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகயிருந்தன.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குத் தொடர்ச்சியாகக் கடன் வழங்கப்பட்டுவருவதன் விளைவாக எதிர்வரும் காலங்களில் அரச வங்கி கட்டமைப்பினால் உரியவாறு இயங்க முடியாமல் போகக்கூடும் என்றும் சில வேளைகளில் அக்கட்டமைப்பு முழுமையாக சீர்குலைவடையும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் அரசாங்கத்தை எச்சரித்திருப்பதாக அச்செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மேலும் அதன் காரணமாக அரச வங்கிக்கட்டமைப்பு சீர்குலைவடையும் பட்சத்தில், அதற்கான பொறுப்பைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அஜித் நிவாட் கப்ரால் அரசாங்கத்திற்கு அறிவித்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும் இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ள மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்குவதை முழுமையாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு உத்தரவிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...