follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉலகம்ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பம்

Published on

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.

இந்த அமர்வின் போது, புதுப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான எழுத்துமூல சமர்ப்பனத்தை ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் சபையில் முன்வைக்கவுள்ள அதே வேளையில், மார்ச் 03ஆம் திகதி இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடல் அமர்வொன்றும் இடம்பெறவுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடருக்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வழிநடாத்தவுள்ளார். இந்த விஜயத்தின் போது, பேரவையின் 49ஆவது அமர்வின் உயர்மட்டப் பிரிவில் உரையாற்றவுள்ள வெளிநாட்டு அமைச்சர், அதன் பின்னர் இலங்கை தொடர்பான ஊடாடும் உரையாடலில் உரையாற்றுவார். இந்த விஜயத்தின் போது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் முக்கியஸ்தர்களுடன் வெளிநாட்டு அமைச்சர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீன நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க தடை

தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள்,...

ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய விண்கலம்

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள்...

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோ பைடனின் மகன் – 17 ஆண்டுகள் சிறை தண்டனை?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் தமது...