follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகைவிடப்பட்ட மைதானத்தினால் 10 கோடி ரூபா நட்டம்

கைவிடப்பட்ட மைதானத்தினால் 10 கோடி ரூபா நட்டம்

Published on

நுவரெலியாவில் விளையாட்டு மைதானமொன்றை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டமையின் ஊடாக, 10 கோடி ரூபாவிற்கு அதிக தொகை நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு மைதானம் 2019ம் ஆண்டு திறப்பதற்கு திட்டமிடப்பட்ட நிலையில், 2020ம் ஆண்டு மைதானத்தின் நிர்மாணப் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளன.

நுவரெலியாவில் 34 ஹெக்டயர் நிலப் பரப்பில் இந்த மைதானத்தை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டது.

மெய்வல்லுநர் போட்டிகள், கபடி, கூடைபந்து, ஹொக்கி, உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களை நடத்தும் வகையில் இந்த விளையாட்டு மைதான தொகுதி நிர்மாணிக்க திட்டமிடப்பட்டது.

உள்ளக மற்றும் வெளியக போட்டிகளையும் இந்த விளையாட்டு மைதான தொகுதியில் நடத்த திட்டமிடப்பட்டது.

இந்த திட்டத்திற்கு 75,528,700 யுரோ நிதி செலவிட தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிதித் தொகையில் 70 சதவீதம் பிரித்தானிய நிதி நிறுவனத்தின் ஊடாகவும், எஞ்சிய தொகையை மக்கள் வங்கி ஊடாகவும் கடன் அடிப்படையில் வழங்க திட்டமிடப்பட்டது.

இவ்வாறு நிர்மாணிக்கப்படவிருந்த மைதான கட்டிடத் தொகுதியின் நிர்மாணப் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டமையின் ஊடாக, பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...