இந்த வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்துரைத்த போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா இதனை தெரிவித்துள்ளார்.
இது பெரும்பாலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலாகவே இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.