follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகுட்டி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது!

குட்டி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது!

Published on

காலில் ஏற்பட்ட காயத்துடன் நேற்று வயலில் இருந்து கொண்டுவரப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட குட்டி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நிக்கவெரட்டிய வனவிலங்கு கால்நடை வைத்திய பிரிவு தெரிவித்துள்ளது.

மூன்றரை வயதும் நான்கு அடி உயரமும் கொண்ட குறித்த யானைக் குட்டி, கல்கமுவ பிரதேசத்தில் வயல்வெளியில் சிக்கித் தவித்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக நிக்கவெரட்டிய வனவிலங்கு கால்நடை மருத்துவப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டது.

குட்டி யானையின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை நிக்கவெரட்டிய வனவிலங்கு கால்நடை வைத்திய பிரிவில் வனவிலங்கு கால்நடை வைத்தியர் இசுரு ஹேவாகோட்டகே தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...