follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுவெளிநாடுகளிலிருந்து வந்த பொதிகளில் போதைப்பொருட்கள்

வெளிநாடுகளிலிருந்து வந்த பொதிகளில் போதைப்பொருட்கள்

Published on

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளினால் மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டசோதனையின்போது, 9 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் அடங்கிய 5 பொதிகள் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குஷ் எனப்படும் கஞ்சா 472 கிராமும் 302 போதை வில்லைகளும் தனியார் பொதிச் சேவையினூடாக கொண்டுவரப்பட்ட பொதிகளுக்குள் காணப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியா, ஜேர்மன், கனடா ஆகிய நாடுகளிலிருந்து கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு குறித்த பொதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், எனினும், பொதியில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகள் போலியானவை என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக எங்கள் லோகோ, எங்கள் சமூக வலைதளன...

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...