follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுஇலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொது சுகாதார பரிசோதகர் கைது

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொது சுகாதார பரிசோதகர் கைது

Published on

பேராதெனிய சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையில், பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் குறித்த வைத்தியசாலையிலுள்ள உணவக உரிமையாளரிடம் 5000 இலஞ்சம் பெற்ற குற்றசாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த பொது சுகாதார பரிசோதகர் வைத்தியசாலையின் உணவகத்தை நடத்தி வரும் உரிமையாளரிடம் இவ்வாறு இடைக்கிடையில் இலஞ்சம் பெற்றுக்கொள்ளப்படும் என்று குறித்த நபரினால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கமைய இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கைது செய்யப்பட்ட பொதுச் சுகாதார பரிசோதகர் பேராதனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததன் பின்னர் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“கஞ்சிபானியின் பெயரே KPI என எழுதப்பட்டது”

அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை கொல்ல...

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவத்த...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக எங்கள் லோகோ, எங்கள் சமூக வலைதளன...