follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுவிருந்துபசாரங்கள் தொடர்பில் பொலிஸாாின் அதிரடி அறிவிப்பு!

விருந்துபசாரங்கள் தொடர்பில் பொலிஸாாின் அதிரடி அறிவிப்பு!

Published on

இளைஞர்களை இலக்கு வைத்து சட்டவிரோதமாக விருந்துபசாரங்களை நடத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இதுதொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளனா்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

காதலர் தினத்தை முன்னிட்டு இளைஞர்களை இலக்கு வைத்து வெவ்வேறு இடங்களில் விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்து, அவற்றினூடாக போதைப்பொருள் வியாபாரம் செய்வதற்கு வியாபாரிகள் ஒன்றிணையக் கூடும். அதனால், தமது பொலிஸ் பிரிவுகளில் சந்தேகத்துக்கிடமாக குறிப்பாக போதைப்பொருள் பயன்படுத்தும்  விருந்துபசாரங்கள், போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்கள் போன்ற இடங்களை உடனடியாக சுற்றிவளைக்குமாறு நாடுபூராகவுமுள்ள சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளோம்.

அதேபோன்று, அவ்வாறான இளைஞர்களை தேடிப்பார்த்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஒவ்வொரு பொலிஸ் பிரிவுகளிலும் கடமையாற்றும் புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். வொஷிங்டனில்...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனங்களுக்கு நேற்று (21) நடைபெற்ற அமைச்சரவை...

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...