follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுபெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

Published on

பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளின்படி, பெப்ரவரி முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை 31,343 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, பெப்ரவரி மாதத்திற்கான வருகை விகிதம் நாளாந்தம் 3,134 ஆகக் காணப்படுவதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும் ரஷ்யாவில் இருந்தே 4,566 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், 3,799 பயணிகளின் வருகையுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் 3,575 பயணிகளுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளதாக அந்தச் சபை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

”ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு” வரும் பக்தர்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

புனித தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்காக வரும் பக்தர்கள், பொலிதீன் உள்ளிட்ட உக்காத பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும், தலதா...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நியமனம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக கமல் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின்...

பிரதமருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் சபாநாயகர் எழுத்து மூலம் விடுத்துள்ள அறிவிப்பு

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்படவுள்ள குழுவிற்கு உறுப்பினர்...