அனுராதபுரம்-புத்தளம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அனுராதபுரம்-புத்தளம் பிரதான வீதியின் சாலியவெவ பகுதியில் 19ஆவது மைல் கல் பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரின் பாதம் உடலில் இருந்து தனியாக கழன்று சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஆபத்தான நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான காரின் சாரதி தலைமன்னார் வைத்தியசாலையின் வைத்தியர் எனவும் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.