follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகௌரவ பிரதமர் ஜய ஸ்ரீ மஹாபோதியில் வழிபாட்டில் ஈடுபட்டார்

கௌரவ பிரதமர் ஜய ஸ்ரீ மஹாபோதியில் வழிபாட்டில் ஈடுபட்டார்

Published on

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜய ஸ்ரீ மஹாபோதியில் இன்று வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
முதலில் அடமஸ்தானாதிபதி, கலாநிதி வணக்கத்திற்குரிய பல்லேகம சிறி நிவாச தலைமை தேரரை சந்தித்து அவரிடம் நலன் விசாரித்தார்.
கௌரவ பிரதமர் அவர்கள் ஜய ஸ்ரீ மஹாபோதியில் வழிபாட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து, ருவண்வெலி மஹா சேய சைத்யராமாதிகாரி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தலைமை தேரரை சந்தித்தார்.
அங்கு கௌரவ பிரதமர் வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தலைமை தேரரின் நலன் விசாரித்து கலந்துரையாடினார்.
இவ்வழிபாட்டு நிகழ்வில் கௌரவ பிரதமருடன் வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் அவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...