follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉலகம்கொலம்பியாவின் மத்திய பகுதியில் மண்சரிவு - 14 பேர் உயிரிழப்பு

கொலம்பியாவின் மத்திய பகுதியில் மண்சரிவு – 14 பேர் உயிரிழப்பு

Published on

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மத்திய பகுதியில் கன மழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரேரா நகருக்கு அருகில் உள்ள டோஸ்கிபிரதாஸில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து 35 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மண்ணில் புதையுண்டு காணாமல்போனவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொலம்பியாவின் பேரிடம் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒடுன் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அருகிலுள்ள வீடுகளில் வசிக்கும் மக்களை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.

 

 
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீன நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க தடை

தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள்,...

ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய விண்கலம்

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள்...

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோ பைடனின் மகன் – 17 ஆண்டுகள் சிறை தண்டனை?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் தமது...