follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுதந்தையை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை – ஓஷல ஹேரத்

தந்தையை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை – ஓஷல ஹேரத்

Published on

பொரளை தேவாலயமொன்றில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தமது தந்தையை சந்திப்பதற்கு சட்டத்தரணிகளுக்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை என சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோருவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி 75 வயதான தமது தந்தை, சகோதரி, மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் வீட்டிலிருக்கும் போது பொலிஸ் அதிகாரிகள் என்று கூறி சிலர் வந்ததாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த குழுவினர் வீட்டில் இருந்தவர்களின் தொலைத்தொடர்பு சாதனங்களை பறிமுதல் செய்ததையடுத்து, தமது தந்தையை அழைத்துச்சென்றதாக ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.

தமது தந்தையிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்தபோதும் இதுவரை தமது தந்தை தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவில்லை என  ஓஷல ஹேரத் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...