follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகறுப்புப்பணத்தை பயன்படுத்த எவருக்கும் சட்டத்தில் இடமில்லை : பசில் பதவி விலகவேண்டும்!

கறுப்புப்பணத்தை பயன்படுத்த எவருக்கும் சட்டத்தில் இடமில்லை : பசில் பதவி விலகவேண்டும்!

Published on

வடகொரியாவிடம் கறுப்பு பணத்தை செலுத்தி, ஆயுதங்களை கொள்வனவு செய்தமை தொடர்பான தகவலை வெளியிட்ட நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பதவி விலகவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்

இலங்கையில் போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில், இலங்கை கறுப்பு சந்தையின் ஊடாக வடகொரியாவில் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக பசில் ராஜபக்சவை கோடிட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதனை இலங்கையின் வெளியுறவு அமைச்சு நிராகரித்திருந்தது. எனினும் நிதியமைச்சர் இந்த தகவலை நிராகரிக்கவில்லை.

இதனையடுத்தே பசில் ராஜபக்ச பதவி விலகவேண்டும் என்று ரஞ்சித் மத்தும பண்டார கோரியுள்ளார். கறுப்புப்பணத்தை பயன்படுத்த எவருக்கும் சட்டத்தில் இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் சர்வதேச சமூகத்தினால் தடைசெய்யப்பட்டுள்ள நாடு ஒன்றுடன் தொடர்புகளை வைத்துக்கொள்ள இலங்கை மக்கள் அரசாங்கத்துக்கு ஆணை வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...