follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுபொலிஸ் அதிகாரி மீது கோடரியால் தாக்குதல்

பொலிஸ் அதிகாரி மீது கோடரியால் தாக்குதல்

Published on

அம்பலாந்தோட்டையில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டு ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்திய நபரும் அவ்விடத்திலேயே நஞ்சு அருந்திய நிலையில், பொலிஸார் அந்நபரை பொறுப்பேற்ற பின்னர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாகவும், இதனை அவதானித்த குறித்த அதிகாரி அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பொலிஸ் அதிகாரி மீது கோடரியால் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...