follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகடற்படையினருக்கு பதவி உயர்வு

கடற்படையினருக்கு பதவி உயர்வு

Published on

74 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு விமானப் படையை சேர்ந்த 175 அதிகாரிகளுக்கும் மற்றும் 2,338 சிப்பாய்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலை உயர்வுகள் தேசிய சுதந்திர தினமான இன்று முதல் அமுலுக்கு வருவதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, தாய் நாட்டுக்காக இராணுவத்தினரால் வழங்கப்பட்டுள்ள அர்ப்பணிப்பு சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தேசத்தின் 74 வது தேசிய சுதந்திர தினத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அனுமதியுடன் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் 480 அதிகாரிகள் மற்றும் 8,034 சிப்பாய்களுக்கான நிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, 7 சிரேஷ்ட பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் நிலைக்கும், 16 கேணல்கள் பிரிகேடியர் நிலைக்கும், 36 லெப்டினன் கேணல்கள் கேணல் நிலைக்கும், 50 மேஜர்கள் லெப்டினன் கேணல் நிலைக்கும் 207 கெப்டன்கள் மேஜர் நிலைக்கும், 94 லெப்டினன்கள் கெப்டன் நிலைக்கும், 70 இராண்டாம் லெப்டினன்கள் லெப்டினன் நிலைக்கும் நிலை உயர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலை உயர்வுகள் தேசிய சுதந்திர தினமான இன்று வழங்கப்படுகின்றது.

73 ஆண்டுகால வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 18 ஓகஸ்ட் 2019 க்குப் பிறகு இன்று வரை 4,341 அதிகாரிகள் மற்றும் 86,741 சிப்பாய்களுக்கு நிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...