follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகறுப்புப் பணத்தில் ஆயுதக் கொள்வனவா? பசில் ராஜபக்சவை திணறடித்த அந்தக் கேள்வி? (காணொளி)

கறுப்புப் பணத்தில் ஆயுதக் கொள்வனவா? பசில் ராஜபக்சவை திணறடித்த அந்தக் கேள்வி? (காணொளி)

Published on

இலங்கையின் இறுதிக் கட்ட போரின் போது கறுப்பு பணத்தைக் கொண்டு வடகொரியாவிடம் ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக அண்மையில்  பத்திரிகையொன்றுக்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ  வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கறுப்பு சந்தையின் ஊடாக போரின் இறுதி கட்டத்தில் வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கெளர்வனவு செய்த்தாக நீங்கள் அண்மையில் பத்திரிகையொன்றுக்கு கூறியிருந்தீர்கள்? உண்மையில் என்ன நடந்தது? என டெய்லி சிலோன் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

”சர்ச்சைக்குரிய விடயங்களை நாம் எழுப்பாதிருப்பதே நல்லது. ஏனெனில் போர் காலத்தில் இடம்பெற்ற விடயங்களை சொல்வது கடினம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ” தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கம் வடகொரியாவிடமிருந்து ஆயுதங்கள் எதனையும் கொள்வனவு செய்யவில்லை எனவும் நிதி அமைச்சர் அவ்வாறான கருத்தை வெளியிடவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், நிதி அமைச்சர் பசில் மீண்டும் இந்த விடயம் குறித்து பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...