விமல் வீரவன்ச அமைச்சராக செயற்பட்ட 05 வருடங்களுக்குள் ஏழறைக் கோடி ரூபா பணத்தை ஈட்டிய விதம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பரிசீலனை செய்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி வழக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று உத்தரவிட்டார்.
வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அமைச்சர் விமல் வீரவன்ச மன்றில் ஆஜராகியிருந்தார்.
2010 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பணம் மற்றும் சொத்துக்களை முறையற்ற வகையில் ஈட்டியமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.