follow the truth

follow the truth

April, 18, 2025
Homeஉலகம்துபாயில் அறிமுகமாகும் ‘பறக்கும் படகு’

துபாயில் அறிமுகமாகும் ‘பறக்கும் படகு’

Published on

ஸ்விட்சர்லாந்து மற்றும் அரபு அமீரக நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள பறக்கும் படகு துபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

‘தி ஜெட்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள சொகுசு படகாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பறக்கும் படகில் 8 முதல் 12 பேர் வரை பயணிக்கலாம் என கூறப்படுகிறது.

ஹைட்ரஜன் எரிசக்தியால் இயங்கும் இந்த படகின் வெள்ளோட்டம் விரைவில் துபாய் கடல் பகுதியில் நடைபெறவுள்ளது. இந்த படகில் இரண்டு எரிபொருள் செல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த படகு இயங்கும்போது சத்தம் வராது என்றும், தண்ணீருக்கு 80 செ.மீ உயரத்திற்கு மேல் இந்த படகு பறந்து செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 75 கி.மீ வேகத்தில் பறக்கும் இந்த படகு ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்குவதால் புகை போன்ற உமிழ்வுகளை வெளியேறுவதில்லை. எனவே இந்த படகு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காது என கூறப்படுகிறது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து

தாய்லாந்துப் புத்தாண்டுத் திருவிழாவை முன்னிட்டு தாய்லாந்து பொலிஸ் முதன்முறையாக   தனது முதலாவது செயற்கை நுண்ணறிவு (AI) இயந்திர பொலிஸ்...

சூரிய மண்டலத்துக்கு அப்பால் உயிர்கள் வாழும் உறுதியான ஆதாரங்கள்

சூரிய மண்டலத்துக்கு அப்பால் உயிர்கள் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்களை கேம்பிரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உதவியுடன்...

தூதரகங்கள் மற்றும் துணைத்தூதரங்கள் சிலவற்றை மூடுவதற்கு ட்ரம்ப் நடவடிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 30 நாடுகளில் உள்ள தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களை மூடுவதற்கான நடவடிக்கையை எடுத்து...