தெற்கு கடற்பரப்பில் 3,300 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் கைதான 17 பேர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அதன்போது அவர்களில் 5 பேரை விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதவான் ஏனைய 12 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அதற்கமைய குறித்த 12 பேரும் எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.