கொட்டாவ இடமாற்ற மத்திய நிலையத்தில் சேவையாற்றும் கட்டணம் அறவிடும் 15 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த 15 அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொட்டாவ இடமாற்ற மத்திய நிலையத்தினூடாக அதிவேக நெடுஞ்சாலையில் நுழையும் வாகனங்களிடம் கட்டணம் அறவிடும் நடவடிக்கை இன்றிலிருந்து (30) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொட்டாவை இடமாற்ற மத்திய நிலையத்தின் செயற்பாடுகளுக்காக, பொலிஸ் அதிகாரிகள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.