follow the truth

follow the truth

September, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாபிரதமரின் பணத்தை அவரின் நண்பர்களின் களியாட்டங்களுக்காக செலவிட்டேன் - உதித் லொக்கு பண்டார

பிரதமரின் பணத்தை அவரின் நண்பர்களின் களியாட்டங்களுக்காக செலவிட்டேன் – உதித் லொக்கு பண்டார

Published on

கணக்காய்வு செய்யும் போது பிரச்சினை ஏற்படும் என்ற காரணத்தினாலேயே பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கில் இருந்து தான் பணத்தை எடுத்ததாக உதித் லொக்கு பண்டார தெரிவித்துள்ளார்.

பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து பெருந்தொகை பணம் மீள பெறப்பட்டுள்ளமை குறித்த தகவல் வெளியான பின்னர், பிரதமரின் பாதுகாப்பு பிரதானி கேட்ட போதே உதித் லொக்கு பண்டார இதனை கூறியுள்ளார்.

கணக்காய்வு செய்யும் போது பிரச்சினை ஏற்படும் என்பதால், நான் அந்த பணத்தை மீள பெற்று தனியாக முதலீடு செய்தேன். ஒரு கோடியே 60 லட்சம் வரை அந்த முதலீட்டில் இருக்கும்.

மீதம் இருந்த சில மில்லியன் ரூபாய்கள் ஹோட்டல்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. பிரதமர் சார்பில் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு களியாட்டங்களுக்காக செலவிட்டேன் என உதித் லொக்கு பண்டார குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை உதித் லொக்கு பண்டார அண்மையில் 25 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து வந்து பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கையளித்துள்ளதாக கூறப்படுகிறது. உதித் லொக்கு பண்டார பிரதமர் மகிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற விவகார செயலாளராக பணியாற்றி வந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...