follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1தொடர்ந்து அதிகரிக்கும் கொவிட்! மீண்டும் முடக்கமா?

தொடர்ந்து அதிகரிக்கும் கொவிட்! மீண்டும் முடக்கமா?

Published on

நாளுக்கு நாள் தற்போது கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் முடக்கம் செய்வதைத் தவிர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும், கொவிட் தொற்றாளர்களினால் தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருவதாக தனியார் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

பாடசாலைகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், இந்த சுய விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்கப் பகுதிகளில் உள்ள பெரிய தொழிற்சாலைகள், உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் வெளிமாவட்ட தொழிலாளர்களை ஊர்களுக்கு திரும்பி அனுப்புமாறு நிர்வாகத்திற்கு உத்தியோகபூர்வமற்ற வகையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு பிரதேசத்தில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், தனிபட்ட நிகழ்வுகள், வைபவங்கள் இரத்துச் செய்யப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

எவ்வாறாயினும், கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அவதானமாக நடந்துகொள்ளாத பட்சத்தில் மீண்டும் முடக்கம் வருவதைத் தவிர்க்க முடியாது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொவிட் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...