2016ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் மத்திய வங்கி பிணைமுறி ஏலத்தின்போதான மோசடி தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான சாட்சிய விசாரணைகளை எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பிக்குமாறு கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆயம் இன்று உத்தரவிட்டுள்ளது.