மின்சார உற்பத்திக்கு அதிகமாக நீர் திறந்துவிடப்பட்டுள்ளமையே விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அசாதாரணமாக வீழ்ச்சியடைந்தமைக்கான காரணம் என இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கசிவு காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவடையவில்லை என நீர்த்தேக்க நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் எஸ்.ஆர்.கே. அருத்பாலா கூறினார்.
விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து அதிகளவான நீர் திறந்துவிடப்பட்ட போதிலும், ரந்தெனிகல நீர்த்தேக்கத்தில் அதிகளவு நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.