யால தேசிய பூங்காவில் யானை ஒன்று தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, வனவளத்துறை அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.
யால தேசிய பூங்காவிற்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற சபாரி வாகனங்களின் சாரதிகளால் குறித்த யானை தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பான காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.
வாகனங்கள் பயணித்தவர், வழியில் குறுக்கிட்ட யானையை, பட்டாசை வெடிக்கச் செய்து காட்டுக்குள் அனுப்பும் காட்சி இதில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு யானைகள் குறுக்கிடும் பட்சத்தில் அவை பாதையைக் கடப்பதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என்ற நியதி உள்ளது.
இதனை மீறிச் செயற்பட்டமை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.