மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நீண்டகாலமாக நியமனம் வழங்கப்படாமையை கண்டித்து நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய மாகாண ஆளுநரின் தன்னிச்சையான தீர்மானங்கள் காரணமாக, இந்த நியமனங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 300ற்கும் அதிக ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் உள்ள போதிலும், இந்த நியமனங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என அவர் சுட்டிகட்டியுள்ளார்.