நாட்டில் இன்று , நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
” நாட்டில் நேற்று முன்தினம் ஒன்றரை மணிநேரம் மின்வெட்டு அமுலில் இருந்தது. நேற்று மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை. நாளை மற்றும் நாளை மறுதினமும் தடையின்றி மின்விநியோகம் இடம்பெறும். 25 ஆம் திகதிவரை தேவையான எரிபொருள் உள்ளது.
ஏப்ரலில்தான் மழை வீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகின்றது. எனவே, அதுவரை உரிய வகையில் முகாமை செய்ய வேண்டும்.
தெரு மின் விளக்குகள் தொடர்பிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.