நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று (19) மாலை 6 மணி முதல் 7:45 வரை மின் விநியோகம் தடைபடும் என மின்சார சபை அறிவித்துள்ளது.
அத்துடன், மேலும் சில பகுதிகளுக்கு இன்றிரவு 7:45 முதல் 9:30 வரை மின்சாரத்தை துண்டிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
செயலிழந்துள்ள களனிதிஸ்ஸ அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கிகள் இதுவரை வழமைக்கு திரும்பாத நிலையிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.
தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பிற்பகல் 2.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 4 கட்டகங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக முன்னர் அறிவிக்கபப்ட்டது.