follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுதனிநபர் கடன் ரூ.8 இலட்சமாக அதிகரிப்பு

தனிநபர் கடன் ரூ.8 இலட்சமாக அதிகரிப்பு

Published on

தற்போதைய சூழ்நிலையில் இலங்கையர் ஒருவரின் தனிநபர் கடன் சுமார் 800,000 ரூபாயாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்த சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான வீழ்ச்சி மற்றும் டொலரின் விலை அதிகரிப்பு என்பனவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை தற்போதைய நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

நாடு அனைத்து துறைகளும் சவால்களை எதிர்நோக்கி வருவதாகவும் நாட்டின் வெளிநாட்டுக் கடன் ரூ.17.2 ட்ரில்லியனாக உள்ளது என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

1970 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க பதவியேற்ற போது அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 9 ரூபாயாகக் காணப்பட்டதாகவும், 1977 ஆம் ஆண்டளவில் அதன் பெறுமதி 7 ரூபாயாக குறைவடைந்ததாகவும் அமைச்சர் அமரவீர சுட்டிக்காட்டினார்.

1977 ஆம் ஆண்டு முதல் அனைத்து அரச தலைவர்களாலும் அரசாங்கங்களாலும் வெளிநாட்டுக் கடனைக் குறைக்க முடியவில்லை என கூறினார்.

அமெரிக்க டொலரொன்றின் மதிப்பு ரூ.200 முதல் 240 வரை உள்ளதால், நாட்டின் டாலர் கையிருப்பு வேகமாக குறைந்துள்ளது என்றும் இந்த நிலை எதிர்காலத்திலும் தொடரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...