follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுபிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட 10 வருடங்களுக்கான முதல் சம்பளம்

பிரியந்த குமாரவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட 10 வருடங்களுக்கான முதல் சம்பளம்

Published on

கடந்த ஆண்டு டிசம்பரில் சியால்கோட்டில் ஒரு கும்பலால் அடித்துக்கொலை செய்யப்பட்ட இலங்கைப் பிரஜை பிரியந்த குமாராவின் குடும்பத்துக்கு 10 வருடங்களுக்கான முதல் சம்பளத்தை பாகிஸ்தான் நிறுவனம் வழங்கியுள்ளது.

அதன்படி ராஜ்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் முதல் சம்பளமான 1,667 அமெரிக்க டொலர் இலங்கையில் உள்ள பிரியந்த குமாரவின் மனைவியின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமரின் அரசியல் தொடர்பு சிறப்பு உதவியாளர் டாக்டர் ஷாபாஸ் கில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

1,667 அமெரிக்க டொலர் முதல் சம்பளத்துடன் 100,000 அமெரிக்க டொலர் மதிப்புள்ள நிதி, பிரியந்த குமாராவின் மனைவியின் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறினார்.

சியால்கோட்டில் உள்ள வணிக சமூகம் இறந்தவரின் குடும்பத்திற்காக 100,000 அமெரிக்க டொலர்களை திரட்டியதாகவும், பிரியந்த குமாரவின் சம்பளத்தை அவரது மனைவிக்கு தொடர்ந்தும் அனுப்புவதை உறுதிசெய்துள்ளாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...