மட்டக்களப்பு, கிரான் நாகவத்தை கடலில் நீராடச் சென்ற இரு மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரானைச் சேர்ந்த ச. அக்சயன் வயது (16) மற்றும் ஜீ. சுஜானந்தன் வயது (16) ஆகிய மாணவர்களே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவர்.
நேற்று முன்தினம் கிரான் தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலர் ஒன்றாகச் இணைந்து கடலில் குளித்துக் கொண்டிருந்த வேளை கடல் அலையினால் மூவர் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதன்போது ஒருவர் உடனடியாக காப்பாற்றப்பட்டார். இருவர் காணமல் போயிருந்தனர். இவர்களை தேடும் பணியில் இரண்டு நாட்களாக கடற்கடையினர், கல்குடா சுழியோடிகள் அமைப்பு, மற்றும் உள்ளுர் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந் நிலையிலேயே அவர்கள் நேற்று மாலை உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.