follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுகொழும்பில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள முதலைகள்! - பொறி வைத்து பிடிக்க நடவடிக்கை (படங்கள்)

கொழும்பில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள முதலைகள்! – பொறி வைத்து பிடிக்க நடவடிக்கை (படங்கள்)

Published on

கொழும்பின் – தெஹிவலை, வெள்ளவத்தை மற்றும் காலிமுகத்திடல் கடற்கரை பகுதிகளில் முதலைகளின் அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.

தெஹிவலை கடற்பரப்பில் வைத்து இரத்மலானையைச் சேர்ந்த 58 வயதான நபர் ஒருவர் முதலையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில், வனவிலங்கு அதிகாரிகளால் முதலையை பிடிக்க முடியாத நிலையில்,  காலி முகத்திடலின் கரையோரத்தில் மற்றுமொரு முதலை காணப்பட்டது.

இதனால், கடலோரப் பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்த்தனர். இதனையடுத்து நடவடிக்கை எடுத்த வனவிலங்கு அதிகாரிகள் முதலைகளை பிடிக்கும் சிறப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.

காலி முகத்திடல் கடற்பரப்பின் ஒரு பகுதியில் இரண்டு பொறிகளை வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முதலைகள் பெய்ரா ஏரியின் நீர் முகத்துவாரத்திற்கு அருகில் அமைந்துள்ளதாக

நேற்று இரவு முதலை கடலில் இருந்து பெய்ரா ஏரி நீர் முகத்துவாரம் வழியாக ஏரிக்குள் செல்வதை வனவிலங்கு அதிகாரிகள் அவதானித்ததாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

முதலைகளை கவரும் வகையில் இறைச்சித் துண்டுடன் புதிய வகைப் பொறி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவைகள் மேற்படி நீர்முகத்தின் இரண்டு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...