இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தீர்மானம் குறித்து அமைச்சர் நாமல் ராஜபக்சவுடன் பானுக ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி 03 ஆம் திகதி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பானுக ராஜபக்ஷ அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தனது ஓய்வு முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு பானுக ராஜபக்ஷவிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மேலும், லசித் மாலிங்க உட்பட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ஓய்வு குறித்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந் நிலையிலேயே இன்று விளையாட்டுத்துறை அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பில் பானுக ராஜபக்ஷ தனது முடிவினை மீள்பரிசீலனை செய்ய சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.