follow the truth

follow the truth

September, 8, 2024
Homeவிளையாட்டுதவறை ஏற்றுக்கொண்டார் ஜோகெகவிச்

தவறை ஏற்றுக்கொண்டார் ஜோகெகவிச்

Published on

அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதற்கு தான் போலி தகவல்களை வழங்கியதாக முன்னணி டெனிஸ் வீரர் நொவேன் ஜோகெகவிச் ஏற்றுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நொவேன் ஜோகெகவிச்சின் அவுஸ்திரேலிய விஜயம் குறித்து, போலியான சுற்றுலா தகவல்களை முன்வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அந்த நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

ஜோகெகவிச் அவுஸ்திரேலியாவிற்கு வருவதற்கு 14 நாட்களுக்கு முன்னர், சமர்பிக்கப்பட்ட ஆவணத்தில், அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த காலப் பகுதியில் அவர் ஸ்பெயின் மற்றும் சர்பியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றதாக கூறப்படும் படங்கள் சமூக வலைத்தயங்களில் பகிரப்பட்டு வந்தன.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய அதிகாரிகளினால் நடத்தப்பட்ட விசாரணைகளில், தான் போலி ஆவணம் சமர்பித்துள்ளமையை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பகிரங்க டெனிஸ் போட்டிகளில் பங்குப்பற்றுவதற்காக அவர் கடந்த 5ம் திகதி அவுஸ்திரேலியா நோக்கி பயணித்திருந்தார்.

கொவிட் தடுப்பூசி  செலுத்திக்கொள்ளாமையினால், அவரை அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்காதிருக்க அந்த நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2027 ஆசியக் கிண்ண கால்பந்து போட்டி – தகுதிச் சுற்று 10ஆம் திகதி

எதிர்வரும் 10ஆம் திகதி சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்தாட்டக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியின்...

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக ரங்கன ஹேரத்

நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச...

கிரிக்கெட் தடை செய்யப்பட்ட இத்தாலிய நகரம்

இத்தாலியின் மோன்கோல்ஃபோன் அதிகாரிகள் அந்நகரில் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளனர். அந்த நகரத்தில் வசிப்பவர்களில் 30% பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களில்...