follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP1உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி விரைவில்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி விரைவில்

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மேலும் ஒரு வருடத்திற்கு பிற்போடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விடயங்களை நீக்கி குறித்த வர்த்தமானி வெளியிடப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளமையினால் அவரால் தேர்தலை பிற்போடுவது தொடர்பான வர்த்தமானியை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதானால் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட வேண்டும்.

எவ்வாறாயினும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இங்கிலாந்தில் உள்ளமையினால் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு முடியாமல் உள்ளது.

இந்தநிலையில் தேர்தலை பிற்போடுவதற்கான இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான விடயங்களை நீக்கி மற்றுமொரு அமைச்சுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய மற்றுமொரு அமைச்சின் ஊடாக குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் ஓராண்டு பிற்போட்டப்பட்டால் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி கட்டாயமாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் ஓராண்டு காலப்பகுதிக்கு மாத்திரமே பிறபோட முடியும்.

இந்தநிலையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை நடத்துவதற்குத் தயாராக உள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...